இலங்கையின் 65வது சுதந்திர தினம் இம்முறை திருகோணமலையில் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்ட நகரம் அழகுபடுத்தப்படுகின்றது. நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு திருகோணமலை ரம்மியமாக காட்சி தருகின்றது. வீதி அபிவிருத்தி பணிகளும் மும்முரமாக நடைபெறுவதனை காணக் கூடியதாக உள்ளது. வியாழக்கிழமை படையினரின் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை நிகழ்வுகளும் ஆரம்பிதது வைக்கப்பட்டது.