9/03/2012

| |

மட்டக்களப்பு விமான நிலைய பணிகள் ஜனாதிபதியால் இன்று ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று ஆரம்பித்து வைக்கவுள் ளார். இலங்கையிலுள்ள உள்ளூர் விமான நிலையங் ளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக மட்டக்களப்பு விமான நிலையம் தெரிவு செய்யப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்தின் பயணிகளையும் இறங்கு துறை கட்டட நிர்மாண பணிகளையும், விமான நிலையத்தின் 1700 மீற்றர் நீளம் கொண்ட விமான ஓடு தளத்தின் மீள் தளமிடல் பணிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். கட்டட நிர்மாணப் பணிகளை விமானப் படையினர் மேற்கொள்வதுடன் விமான ஓடுபாதை மீள் தளமிடல் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்றுள்ளது. அமைச்சர் பிரியங்கர ஜயரட்ணவின் அழைப்பில் ஜனாதிபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பதுடன் பிரதி அமைச்சர்கள் முரளிதரன், ஹிஸ்புல் லாஹ் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.